×

மக்களுடன் முதல்வர் திட்டத்தால் மனுக்களுக்கு உடனடி தீர்வு

 

சிவகங்கை, பிப்.19: மக்களுடன் முதல்வர் திட்டத்தால் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில், மக்கள் தொடர்பு முகாம், முதல்வரின் முகவரி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் போன்றவைகளை நடத்தி, அதன் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பரில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என மொத்தம் 13துறைகளின் கீழ் மனுக்கள் பெறப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்ட 35நாட்களில் 8ஆயிரத்து 883மனுக்கள் பெறப்பட்டது. இதில் 6ஆயிரத்து 946மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆயிரத்து 278மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வீட்டுமனை பட்டா பெறுதல், பட்டா மாறுதல், தையல் மெசின், தேய்ப்பு பெட்டி வழங்கல், மாற்றுத்திறனுடையவர்களுக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கல், விவசாயத்திற்கான டிராக்டர் மானியம் மற்றும் உபகரணங்கள் வழங்கல், தொழில் தொடங்க கடனுதவி, சொத்து வரி பெயர் மாற்றம், பிறப்பு,

இறப்பு சான்று வழங்கல் என ஒரே மாதத்தில் 6ஆயிரத்து 946மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது உள்ளிட்ட அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் கூறியதாவது:பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளான பட்டா மாறுதல், வீட்டு மனைப்பட்டா வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளும் ஒரே மாதத்தில் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

The post மக்களுடன் முதல்வர் திட்டத்தால் மனுக்களுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Sivagangai ,People's Grievance Day ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்